Monday, May 16, 2005

குமுடன் அல்லது விகதம்

வர வர, குமுதம், விகடன் இரண்டிலும், ஒரே விஷயங்கள் வருவது, அதிகரித்துக் கொண்டே போகிறது. காதல் சந்தியா பற்றி இரண்டிலும் ஓரே வாரத்தில் வந்தது. அப்புறம், சிம்பு பற்றி. அதற்குப் பிறகு, இந்த வாரம், மத்திய அமைச்சர் அன்புமணி.

யார் நம்பர் 1 என்று போட்டி நடந்தது. (ஆமாம், இரண்டுக்கும் இடையில், ‘பெஸ்ட் கண்ணா, பெஸ்ட்’ குங்குமம் என்ன ஆச்சு?). விகடன், இவ்வளவு, ‘அக்ரெஸி’வாக இருந்து, பார்த்த ஞாபகமே இல்லை. ஆமாம், நாம் எப்படி உண்மையைத் தெரிந்து கொள்வது? யாராவது உங்களுக்குத் தெரிந்து, ABC ‘ஆஃபீ’ஸில் வேலை பார்க்கிறார்களா? ஆம் என்றால் கேட்டுச் சொல்லவும். இப்படித்தான், டெல்லியில், ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ வும், ‘ஹிந்துஸ்தான் டைம்’ஸும், கோர்ட்டுக்கே போனதாக, ஞாபகம்.

ரொம்ப நாள் முன்னாடி, மணியனும், சாவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சாவியிடம், என்க்கு ஒரு நன்றியுணர்வு உண்டு: என்னுடைய முதல் சிறுகதை, ‘உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு’, அவருடைய ‘தினமணி கதி’ரில் தான் வெளியானது.

0 Comments:

Post a Comment

<< Home