Monday, July 11, 2005

நான் பட்ட கடன்

ஓர் வாழைப் பழக்காரரிடம் நாங்கள் நேற்று ரூ 15 கடன் பட்டு விட்டோம். சங்கடமாக இருக்கிறது.

பழம் வாங்கிக் கொண்டிருக்கும் போது, திடீர் என்று மழை வந்து விட, நாங்கள் அவசரமாக ஒதுங்க வேண்டி வந்தது (அது ஒன்றும் ஸ்கூல் இல்லையென்றாலும்). கடைசியில் என்னவோ, ஒரு நிமிஷம் கூடப் பெய்யவில்லை – உடனே, நின்று விட்டது. வெளியே வந்து பார்த்தால்,

பழங்களைக் காணோம்!

பழ வண்டியைக் காணோம்!

பழக் காரரையும் காணோம்!

எப்படி மாயமாக மறைந்து போயிருக்கக் கூடும்? ஒரு வேளை, நாரதர் எங்களுக்காக, ‘ஸ்பெஷ’லாக அனுப்பிய, ஞானப் பழங்களாக இருக்குமோ? (போய் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்!) ஏதாவது போன ஜன்மக் கடனாக இருக்குமோ? (அதாவது, பழக் காரருக்கு) ஆமாம், நாங்கள் பணம் தரவில்லை யென்பது, அவருக்குத் தெரியுமா?

விடை கிடைக்காத கேள்விகள்.

இப்போதைக்கு, அந்தப் பணத்தை ஏதாவது கோயில் உண்டியலில் போடுவது தான், எங்களுக்குத் தெரிந்த வழி. (கூடவே, அவர் இந்துவாக இருக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன். இல்லா விட்டால், மசூதி, சர்ச் என்று தேட வேண்டுமே!)

0 Comments:

Post a Comment

<< Home