Monday, January 09, 2006

வழியும் குறுக்கு வழியும்

(ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா Dec 2005 இதழில் இருந்து)

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸப்தம ஸ்கந்தத்தில் ஹிரண்யகசிபு பிரஹ்லாதனைப் பார்த்து, நீ அறிந்தவற்றுள் சிறந்தது எது எனக் கேட்கிறான். அதற்கு பிரஹ்லாதன் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வாந்தர்யாமி என்றும், அவனை அடையும் ஒன்பது வழிகளைக் கூறுகிறான்:

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்



  1. பகவன் நாமா / புகழ் இவைகளைக் கேட்பது (உ.ம்: பரீக்ஷித் மஹாராஜா)
  2. பகவன் நாமாவை / கதைகளைச் சொல்வது (உ.ம்: சுகப்ரம்ம மஹர்ஷி)
  3. பகவானையே எப்போதும் நினைப்பது (உ.ம்: ப்ரஹ்லாதன்)
  4. பகவானை எப்போதும் புஷ்பத்தால் அர்ச்சிப்பது (உ.ம்: ப்ருது சக்ரவர்த்தி)
  5. பகவானின் திருவடிகளில் சேவகம் செய்வது (உ.ம்: தாயார் மஹாலக்ஷ்மி)
  6. பகவானை அடிக்கடி விழுந்து சேவிப்பது (உ.ம்: அக்ரூரர்)
  7. பகவானுக்குத் தாஸனாயிருத்தல் (உ.ம்: கருடன் / ஹனுமார்)
  8. பகவானுடைய தோழனாக இருத்தல் (உ.ம்: அர்ஜுனன்)
  9. ஸகலத்தையும் அவனுக்காக அர்ப்பணித்தல் (உ.ம்: மஹாபலி)

******
ஸ்வாமி வேதாந்த தேசிகன் பகவானை நினைக்க ஒரு எளிய வழி சொல்லித் தருகிறார்:


  • காலையில் எழுந்த உடன்: ஹரி என்று சொல்லவும்
  • உணவு உண்ணும் போது: கோவிந்தன் நாமம்
  • வெளியே செல்லும் போது: கேசவன்
  • படுக்கும் போது: மாதவன்

0 Comments:

Post a Comment

<< Home